you are a poem

வரிகளில்லை —
எழுத இயலாத ஒன்றாக அது.

அழகாக ஒன்று,
அன்பாக ஒன்று.

பக்கங்களுக்குள் கட்டிவைக்க
எந்தப் புத்தகத்துக்கும் இயலாதது.

தங்கிப் போகப் பிறந்தது அல்ல —
பறக்கவே பிறந்தது.

அது பேசுகிறது,
அது நடக்கிறது.

கவிஞன் இன்னும் கவனிக்காத
ஒரு கவிதை அது…

ஆனால் என் எழுதுகோலின் மையாகி,
எல்லாவற்றையும் எழுதச் செய்கிறது.

நான் எழுதுகோலை மட்டும் பிடித்திருக்கிறேன்;
எழுதுவது அதுவே.

ஒரு கவிதை…
ஒரு இனிய கவிதை..
நீ — என்றென்றும் நீடிக்கும் என் கவிதை

🩵🩵

No comments:

అద్దం

మనిద్దరం కలవకుండా ఆపుతున్నది అద్దం; లేదంటే నేను దాని ముందుకు నిలబడిన ప్రతిసారి, నువ్వు నా ముందే ఉంటావు... The only thing stopping us from me...