எழுத இயலாத ஒன்றாக அது.
அழகாக ஒன்று,
அன்பாக ஒன்று.
பக்கங்களுக்குள் கட்டிவைக்க
எந்தப் புத்தகத்துக்கும் இயலாதது.
தங்கிப் போகப் பிறந்தது அல்ல —
பறக்கவே பிறந்தது.
அது பேசுகிறது,
அது நடக்கிறது.
கவிஞன் இன்னும் கவனிக்காத
ஒரு கவிதை அது…
ஆனால் என் எழுதுகோலின் மையாகி,
எல்லாவற்றையும் எழுதச் செய்கிறது.
நான் எழுதுகோலை மட்டும் பிடித்திருக்கிறேன்;
எழுதுவது அதுவே.
ஒரு கவிதை…
ஒரு இனிய கவிதை..
நீ — என்றென்றும் நீடிக்கும் என் கவிதை
🩵🩵